Wednesday, February 8, 2012

Ninnukori Varanam Lyrics inTamil-Agni Natchathiram

Singer;K. S. Chitra
Composer: Ilaiyaraaja
Lyrics: Vaali


நின்னுக்கோரி வர்ணம் வரணம்
இசைத்திட என்னை தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க
உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வரணம்
இசைத்திட என்னை தேடி வரணும் வரணும்

உன்னைத்தான் சின்ன பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூ போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது
தேகம் உன்னை தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது
ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேன் ஆற்றிலே
நீராட நினைக்கையில்

நின்னுக்கோரி வர்ணம் வரணம்
இசைத்திட என்னை தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க
உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வரணம்
இசைத்திட என்னை தேடி வரணும் வரணும்

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம்
வாடிப்போன காரணம்
கன்னித் தோகை மேனியில்
மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே
தீயாக கொதிக்குது..

நின்னுக்கோரி வர்ணம் வரணம்
இசைத்திட என்னை தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க
உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வரணம்
இசைத்திட என்னை தேடி வரணும் வரணும்

9:20 PM